மனிதன்

இப்படியாக மனிதன்..
-------------------

இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்..

தொலைக்காட்சி
--------------

அடக்கம் செய்யப்படுகிறோம்...
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

முரண்
------
இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை
~நாயே!பன்றியே!குரங்கே!



காலம்
------
உன் கையிலா கடிகாரம்?கடிகாரத்தின் கையில் நீ


கொலை
---------

ஒரு நாள்
வாழ்க்கை
பூவுக்கு!!...
விரியுமுன்பே
பறித்து
இறைவனுக்கு
அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு
வாழ்க்கை
வேண்டி
தனக்கு!!!!!!!!!!

No comments: