ஏழை - காசி அனந்தன்

வெறி
-----
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்...எரிந்தது அடுப்பல்ல-
சேரி

உறுத்தல்.
--------
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி
இழைத்த பனைப்பாய்...
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

கண்ணோட்டம்
-------------
செருப்பைப்பார்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்;தவனின்
கையைப்பார்க்கிறேன

குப்பைத்தொட்டி
---------------
அலுவலகத்தில் இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது அலுவலகம்.

கடற்கரை
---------
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரிய இடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும்
நொடியோடும்
ஒடுங்கி கிடக்கும் மீனவர்
குடிசைகள

சாமி
----
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

தேர்தல்
-------
மாலை வளையல் மூக்குத்தி
பொன்னான எதுவும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் சொல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்...
பொன்னான வாக்குகள

ஏழ்மை
------
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்


புரட்சி
------
'மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்!
குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்



திமிர்
----
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்

No comments: