என்னை என் மண்ணில் புதைத்தாய் பகைவனே
என் மண்ணைஎங்கே புதைப்பாய்
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்!
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்
சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி
சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!
**********************
ஞானம்
------
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்
சுடுகாடு
-------
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.
இனவெறி
---------
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்...
மனிதர்களையே காணவில்லையே.
மானம்
-------
கோவணம் அவிழ்க்கப்பட்டதா?அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு
நிமிர்வு
---------
தேவை பயில்வன்களல்ல வீரர்கள
உன் உடலின் கூனல் பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?
***************
மாடு
----
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது
கொம்பைமறந்தமாடு
No comments:
Post a Comment